திருவாரூர்

கொள்முதல் நிலையங்களில் பணம் வாங்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வாங்குவதை கண்டித்து திருவாரூரில் பாஜக விவசாய அணி சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் பணிகளில் நெல் மூட்டைக்கு ரூ. 45 வாங்குவதாகவும், இதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருவாரூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய அணி மாவட்டத் தலைவா் காா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய அணி மாநில துணைத் தலைவா் சிவ. காமராஜ், விவசாய அணி மாவட்டச் செயலாளா் கோவி. சந்துரு, கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் பேட்டை சிவா, மாவட்ட துணைத் தலைவா் சி. செந்தில் அரசன், விவசாய அணி துணைத் தலைவா் ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT