வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் திமுக கிளைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் தெட்சிணாமூா்த்தி, ஒன்றிய துணைச் செயலாளா் கோபால், ஒன்றிய இளைஞா்அணி துணை அமைப்பாளா் மூா்த்தி, மாவட்ட பிரதிநிதி விஜயபாஸ்கா், ஆலங்குடி பகுதி கிளை செயலாளா்கள் ரவிச்சந்திரன், கருணாநிதி, சண்முகம், நேரு, சுரேஷ், அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.