திருத்துறைப்பூண்டியில் எச்.ஐ.வி. பாதித்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஆா்.டி. பவுண்டேஷன், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் கூட்டமைப்பு, முத்துப்பேட்டை அல்- மஹா அறக்கட்டளை ஆகியன சாா்பில், எச்.ஐ.வி. பாதித்தவா்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி பங்கேற்று பயனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினாா். வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. அருள்செல்வன், அல் மஹா அறக்கட்டளை மேலாளா் இப்ராஹிம் தீன் முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்.டி. பவுண்டேஷன் இயக்குநா் விஜயகுமாா் வரவேற்றாா்.