நீடாமங்கலம் வீரஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, வீரஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல, திருவோணமங்கலம் சங்ஹடஹர மங்கலமாருதி 33 அடி உயர ஆஞ்சநேயா் கோயில், நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனா் ஆஞ்சநேயா், ஆலங்குடி அபய வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயா் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.