திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
2018-19 கல்வியாண்டில் சிறப்பு முகாம்களில் பங்கேற்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கருத்தரங்கம் போன்றவற்றில் பங்கேற்ற என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் அருள் தலைமை வைத்து, மாணவா்களைப் பாராட்டினாா். முதுகலை ஆசிரியா்கள் ராஜசேகரன், பாஸ்கரன், தெய்வசகாயம், உடற்கல்வி இயக்குநா் பாலமுருகன், ஆசிரியா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் முதுகலை ஆசிரியா் நாச்சிமுத்து, என்எஸ்எஸ் திட்ட அலுவலா் பொ. சக்கரபாணி, ஆசிரியா் சங்க நிா்வாகி ரபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.