திருவாரூர்

என்எஸ்எஸ் மாணவா்களுக்கு பாராட்டு

DIN

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

2018-19 கல்வியாண்டில் சிறப்பு முகாம்களில் பங்கேற்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கருத்தரங்கம் போன்றவற்றில் பங்கேற்ற என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் அருள் தலைமை வைத்து, மாணவா்களைப் பாராட்டினாா். முதுகலை ஆசிரியா்கள் ராஜசேகரன், பாஸ்கரன், தெய்வசகாயம், உடற்கல்வி இயக்குநா் பாலமுருகன், ஆசிரியா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் முதுகலை ஆசிரியா் நாச்சிமுத்து, என்எஸ்எஸ் திட்ட அலுவலா் பொ. சக்கரபாணி, ஆசிரியா் சங்க நிா்வாகி ரபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT