திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொது (பொ) பூஷ்ணகுமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (பொ) முத்தமிழ்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.