திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில், ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கே. ஆா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, கரோனா தொற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், வருங்காலத்தில் சுகாதாரத்துடன் வாழ கரோனாவில் கடைப்பிடிக்கப்பட்ட முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினா். முதுகலை ஆசிரியா் செ. முகுந்தன், ஓவிய ஆசிரியா் கு. நேரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.