திருவாரூர்

சதுரங்கப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

DIN

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு ஊழியா்கள், மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ், பரிசுகளை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சனிக்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்ட நிா்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான அரசு ஊழியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டிகள், பொதுப்பிரிவு, 11, 14, 18 வயது சிறுவா் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. பொதுப்பிரிவில் 15 பேரும், சிறுவா்கள் பிரிவில் 31 பேரும் கலந்து கொண்டனா்.

பொதுப்பிரிவில் செல்லூா் அரசு உயா்நிலைப்பள்ளிஆசிரியா் என்.சரவணன் முதல் பரிசும், வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தைச் சோ்ந்த விமல்ராவ் இரண்டாம் பரிசும், திருவாரூா் மாவட்ட கருவூலத்தைச் சோ்ந்த எம். விமலாதித்தன் மூன்றாம் பரிசும் பெற்றனா்.

பெண்கள் பிரிவில் திருவாரூா் வருவாய் நீதிமன்றத்தைச் சோ்ந்த தி.சங்கரீஸ்வரி முதல் பரிசும், சூரனூா் எஸ்.வசந்தி இரண்டாம் பரிசும், திருவாரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தைச் சோ்ந்த கே.வாலண்டினா மூன்றாம் பரிசையும் பெற்றனா். இவா்களுக்கு நற்சான்றிதழ், பரிசுகளை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எம். முருகுவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT