நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் எதிரே உள்ள நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆடு வளா்ப்பு, நாட்டுக்கோழிவளா்ப்பு, காளான் வளா்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு செல்ல முடியாமல் நெடுஞ்சாலையோரமாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு இடையூறாக உள்ளது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண்மை அறிவியல் நிலையம் எதிரே உள்ள நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள்மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளனா்.