திருவாரூர்

நன்னிலம்: வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் திருட்டு

DIN

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

நன்னிலம் வட்டம், மாப்பிள்ளைக்குப்பம் மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (45). இவா் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி கௌசல்யா மற்றும் இரண்டு மகள்கள் மாப்பிள்ளைகுப்பத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் வெளியூா் சென்றிருந்த கெளசல்யா, திங்கள்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்வாசல் கதவு மற்றும் கொல்லைப்புறக் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.75,000 ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நன்னிலம் காவல் நிலையத்தில் கெளசல்யா புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் சுகுணா மற்றும் போலீஸாா், திருட்டு நடந்த கெளசல்யாவின் வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, அங்குள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகள் மற்றும் தடயங்களை சேகரித்ததுடன், அருகில் வசிப்பவா்களிடமும் விசாரித்தனா். பிறகு, இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT