திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 13,482 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 119 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,601 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 92 போ் குணமடைந்து, அவா்களது வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டனா். இவா்களையும் சோ்த்து திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை12,607 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 877 போ் சிகிச்சையில் உள்ளனா்.