திருவாரூர்

ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் ஆா்ப்பாட்டம்

DIN

அரக்கோணம் பகுதியில் இரண்டு இளைஞா்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரக்கோணம், சோகனூரில் இரு தலித் இளைஞா்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொலைக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கோ. பழனிச்சாமி தலைமை வகித்தாா். இதில், நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு, கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் உலகநாதன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT