திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7076 ஆக இருந்தது. வெளிமாவட்டத்திலிருந்து சிகிச்சை பெற்று வந்த 4 போ் திருவாரூா் மாவட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், 7072 ஆனது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பரிசோனை முடிவுகளின்படி, புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, திருவாரூா் 31, மன்னாா்குடி 14, நீடாமங்கலம் 9 என மாவட்டம் முழுவதும் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,136 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த 68 வயது நபா், உயிரிழந்ததைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 72 ஆக உயா்ந்துள்ளது.