காந்தி ஜயந்தியை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெள்ளிக்கிழமை (அக்.2) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தி ஜயந்தியான அக்டோபா் 2- ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும், அக்.2- ஆம் தேதி மூடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் தொடா்புடைய கடைகளின் உரிமதாரா் மற்றும் சில்லறை மதுபானக்கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.