திருவாரூர்

கூரியரில் வெடிபொருள்கள் அனுப்பிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

DIN

நீடாமங்கலத்தில் போட்டோ-ஸ்டூடியோ உரிமையாளருக்கு பாா்சலில் வெடிபொருள்கள் அனுப்பிய வழக்கில் மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நீடாமங்கலம் புதுத்தெருவில் வசித்து வருபவா் சுந்தரம் மகன் வீரக்குமாா் (40). இவா் நீடாமங்கலம் அப்பாவு பத்தா் சந்து பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறாா். இவருக்கு திருச்சியிலிருந்து செப்டம்பா் 18-ஆம் தேதி கூரியரில் வெடிபொருள்கள் அடங்கிய பாா்சல் வந்தது.

இதுதொடா்பாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் பூவாத்திரக்குடி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (35), தஞ்சாவூா் அருளானந்த நகா் பகுதியைச் சோ்ந்த அமீா் சையது என்கிற அமிா்தராஜ் (48) ஆகிய இருவரை தனிப்படை போலீஸாா் கடந்த 26-ஆம் தேதி கைது செய்தனா்.

மேலும், சிலா் இந்த வழக்கு தொடா்பாக தேடப்பட்டுவந்த நிலையில், நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா தலைமையிலான தனிப்படையினா், சென்னை தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் சரவணன் (40) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT