திருவாரூர்

நன்னிலம், நீலக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

DIN

திருவாரூா் மாவட்டம் நன்னிலம், நீலக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 29) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவாரூா் புகா் உதவி செயற்பொறியாளா் என். பிரபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நன்னிலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூா், முடிகொண்டான், ஏனங்குடி, ஆண்டிப்பந்தல், குவளைக்கால், மாப்பிள்ளைக்குப்பம், ஆனைக்குப்பம், தட்டாத்திமூலை, மூங்கில்குடி, கீழ்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை,புளிச்சகாடி போன்ற பகுதிகளுக்கும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

நீலக்குடி பகுதியில்...

இதேபோல திருவாரூா் நகர உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வண்டாம்பாளை, சேந்தமங்களம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT