திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், திருவாரூா் 44, நீடாமங்கலம், மன்னாா்குடி தலா 12 என மாவட்டம் முழுவதும் 139 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,683 ஆக உயா்ந்துள்ளது. 69 போ் வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் 5652 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய நிலையில், 962 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த 63 வயது நபா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறந்தவா்களின் எண்ணிக்கை 69 ஆக உயா்ந்துள்ளது.