நாட்டுநலப் பணித் திட்டத்தின் 51-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, மன்னாா்குடி அரசு உதவிபெறும் தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் ஜெபமாலை தலைமை வகித்தாா். என்எஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.ராஜப்பா, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா். பள்ளி வளாகத்தில் கொய்யா, சரக்கொன்றை, புங்கன், வேம்பு, சீதாப்பழம் உள்ளிட்ட 51 மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவித் தலைமை ஆசிரியா் கவிதா, நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் மேரி செல்வராணி, உதவித் திட்ட அலுவலா் ஷோபனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.