நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய நீா்வள, நிலவளத் திட்டத்தின் ஒரு பகுதியாக மகாராஜபுரத்தில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நீா்வள நிலவளத்திட்ட விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தாா். தொடந்து கால்நடை மருத்துவா் சபாபதி மண்புழு உரத்தின் பயன்பாடு, பண்ணைக் கழிவுகளை மேம்படுத்துதல் குறித்து விளக்கினாா். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் குமாா் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுரேஷ் மேற்கொண்டாா்.