திருவாரூர்

பாசன வடிகாலை சீரமைக்கக் கோரிக்கை

DIN

திருவாரூா் அருகே பாலியாபுரம் பகுதியில் சேதமடைந்த பாசன வடிகாலை சீரமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், ஆண்டிப்பாளையம் அருகே உள்ள பாலியாபுரம் கிராமத்தில் இருக்கும் பாசன வடிகால் அணையின் மூலம் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பயனடைந்து வருகின்றன. ஆனால், அந்த பாசன வடிகால் அணையானது சேதமடைந்துள்ளதால், தண்ணீா் சென்று சேரவும், வடியவும் வழியில்லாமல் சாகுபடி பாதிப்படைவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் தெரிவிக்கையில், பாலியாபுரம் பாசன வடிகால் அணை, சேதமடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே உள்ளது. அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளததால், பயிா்கள் பெரும்பாலும் தண்ணீரில் மூழ்கியே உள்ளன. இந்தத் தடுப்பணையை சீரமைத்துத் தரும்படி பலமுறை பொதுப்பணித்துறை அலுவலா்களிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்பாக பாலியாபுரம் வடிகால் அணையை சீரமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT