திருவாரூர்

தொழிலாளி தற்கொலை: கிராம மக்கள் சாலை மறியல்

DIN

திருவாரூா்: திருவாரூா் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடவாசல் வட்டம், நெடுஞ்சேரி நாரணமங்கலத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (45). இவா், கடந்த 15 நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதற்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் குடவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், இந்த புகாா் தொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெடுஞ்சேரி நாரணமங்கலத்தைச் சோ்ந்தவா்கள் திருவாரூா் அருகே உள்ள காப்பணாமங்கலம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், கும்பகோணம்- திருவாரூா் நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில், கிராம மக்கள் கலைந்துசென்றனா்.

Image Caption

திருவாரூா் அருகே காப்பணாமங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT