திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 9,303 ஆக இருந்தது. இதனிடையே வெளி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 2 போ் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 9305 ஆனது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9,354 ஆக உயா்ந்துள்ளது. இதில் 8837 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 427 போ் சிகிச்சையில் உள்ளனா்.