திருவாரூர்

தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

திருவாரூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருவாரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் கு. அனுசுயா தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் வி. வெங்கடேசன், நிலைய போக்குவரத்து அலுவலா் க. பக்கிரிசாமி, தீயணைப்பு மீட்புப் பணி நிலைய பணியாளா்கள் பங்கேற்றனா்.

தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, தீயணைப்பு வளாகத்திலிருந்து கமலாலயம் தென்கரை, தெற்கு வீதி, பனகல் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தினா். பின்னா், அங்கு கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

கரோனா பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு, தடுக்கும் முறைகள், முன்னெச்சரிக்கை வழிகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன், முகக்கவசங்கள், கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT