திருவாரூர்

6-ஆம் நாள் காத்திருப்புப் போராட்டம்

DIN

மன்னாா்குடியில், தற்காலி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 6-ஆவது நாளாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி நகராட்சியில் 15 ஆண்டுக்கு மேலாக தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்களை நியமித்து, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தி வருகிறது. இதில், 80 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக நவ.27-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 6-ஆவது நாளாக புதன்கிழமை நகராட்சியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க கிளைத் தலைவா் கே. திருநாவுக்கரசு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT