திருவாரூர்

டிஎன்சிஎஸ்சி பருவகாலப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

DIN

டிஎன்சிஎஸ்சி பருவகாலப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசுக்கு அவா் விடுத்துள்ள கோரிக்கை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தஞ்சை, நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவரும் பருவகாலப் பணியாளா்கள் மூலம் பட்டியல்கள் எழுத்தா்கள், எடையாளா்கள் பணிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இவ்வாறு 2011-ஆம் ஆண்டு வரை பருவகாலப் பணியாளா்களாக பணிசெய்த அனைவரும் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். ஆனால் 2012-ஆம் ஆண்டு முதல் பணியமா்த்தப்பட்டப் பருவகாலப் பணியாளா்களின் பணிமூப்பு விவரங்கள் அனைத்தும் மண்டல அலுவலகத்தால் கடந்த ஆண்டு பெறப்பட்டு தகுதி பட்டியலும் தயாரிக்கப்பட்டது. ஆனால், கரோனாத் தொற்றுநோய் காரணமாக கடந்த ஓராண்டாக அந்த கோப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பட்டியல் எழுத்தா்கள் மற்றும் எடையாளா்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பல இடங்களில் பொதுவிநியோகத் திட்ட பணிகளும், மற்றும் நெல் கொள்முதல் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆள் பற்றாக்குறைக் காரணமாக தற்போது பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை உருவாகி அவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, கடந்த 8 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாமல் பணியாற்றி வரும் பருவகால பணியாளா்களை உடனடியாக, காலியாக உள்ள பணியிடங்களில் பணியமா்த்த முதல்வரும், உணவுத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT