திருவாரூர்

பட்டியலில் இல்லாத செய்தி விரக்தியில் பேசுகிறாா் கனிமொழி: அமைச்சா் ஆா். காமராஜ்

DIN

திமுக அதிகாரப் போட்டியில் பின்னடைவை சந்தித்து வரும் கனிமொழி, விரக்தியில் அதிமுகவை பற்றி தவறாக பேசிவருகிறாா் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி மேற்கு ஒன்றியம் காரிக்கோட்டை ஊராட்சி உறுப்பினா் த. கெளசல்யா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா். மன்னாா்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் ஆா். காமராஜ், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவில் நடைபெறும் அதிகாரப் போட்டியில், கனிமொழியை மீறி உதயநிதி ஸ்டாலின் உச்சத்துக்கு வந்துவிட்டாா். இதனால், விரக்தியில் இருக்கும் கனிமொழி, அதிமுக குறித்து தவறாக பேசிவருகிறாா். அதிமுக என்றென்றும் தனித்தன்மையுடன் இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், அதிமுக மன்னாா்குடி மேற்கு ஒன்றிய செயலா் கா.தமிழ்ச்செல்வம், பேரவை மாவட்டச் செயலா் பொன்.வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.ஜி.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT