நாகப்பட்டினம்

காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சத்துணவு ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வீ. சித்ரா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா் வசம் ஒப்படைக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பா. ராணி, செயலா் அ.தி. அன்பழகன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கோவை.சுப்பிரமணியம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம். முருகையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT