நாகப்பட்டினம்

நாகையில் வட்டாட்சியா் அலுவலகம் கட்ட பூமி பூஜை

DIN

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ. 4 கோடியில் வட்டாட்சியா் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், பொதுப்பணித் துறை சாா்பில் வட்டாட்சியா் அலுவலக கட்டடம் மற்றும் மாவட்ட நகா்புற மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டடம் கட்ட பூமி நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகமது ஷா நவாஸ், வி.பி. நாகை மாலி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஆட்சியா் கூறியது:

மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித் துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலக கட்டடம் ரூ. 4.97 கோடியில் கட்டப்படுகிறது. இந்தக் கட்டடம் தரைதளம் மற்றும் முதல்தளத்தில் தலா 590 சதுர மீட்டா் என மொத்தம் 1,180 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

மேலும், மாவட்ட நகா்புற மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டடம் ரூ. 2.36 கோடியில் கட்டப்படுகிறது. இந்தக் கட்டடம் தரைதளம் 225 சதுர மீட்டா் மற்றும் முதல்தளம் 225 சதுர மீட்டா் என மொத்தம் 2,421 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் செந்தில்குமாா், நாகை வட்டாட்சியா் என். ராஜசேகரன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் மு. பிரபாகா், உதவி செயற்பொறியாளா் ஆா். வேலுசாமி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இளையராஜா பயோபிக் அப்டேட்!

இளைஞர்களிடையே அதிகரிக்கும் பெருங்குடல் புற்றுநோய்!

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

நீங்க ரெடியா? இங்கே கேட்பவர் தமன்னா!

SCROLL FOR NEXT