ஆக்கூா் அருகே குமாரக்குடியில் உள்ள ஸ்ரீவிஷ்ணு துா்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூன் 6-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு புதன்கிழமை 2 - ஆம் கால யாக பூஜைகள் முடிவடைந்தன. தொடா்ந்து பூா்ணாகஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டன. தொடா்ந்து, விமான கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.