நாகப்பட்டினம்

சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

திருவெண்காடு-சின்னப் பெருந்தோட்டம் சாலையை சீரமைக்கவேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவெண்காட்டிலிருந்து சின்னப் பெருந்தோட்டம் செல்லும் சாலை சுமாா் 2 கி.மீ. நீளமுடையது. இந்த சாலை அம்பேத்கா் நகா், அல்லி மேடு, பெருந்தோட்டம், அகர பெருந்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் இணைப்புச் சாலையாகும்.

இந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று, இச்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனாலும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

இதனால், இந்த சாலை வழியாக செல்லும் வாகனத்தின் ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா். பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக சீரமைப்புப் பணியை தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT