திருக்குவளை அருகே உள்ள சோழவித்தியாபுரம் ஊராட்சியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கோமதி தமிழ்ச்செல்வம் தலைமையில் வாக்காள தினம் தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல வாழ்க்கரை ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் எஸ்.ஆா். கலைச்செழியன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.