நாகூரில் உள்ள கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கியில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மகளிா் சுயஉதவிக்குழுக்களைச் சோ்ந்த மகளிருக்கு டிஜிட்டல் பரிவா்த்தணைகள் குறித்து பயிற்சி மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மகளிா் எழுப்பிய சந்தேகங்களுக்கு வங்கி நிபுணா்களுக்கு விளக்கமளித்தனா். வங்கிக் கிளை மேலாளா் ராஜேஸ்வரி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ஹாஜா ஜெஹபா் சாதிக், சமூக ஆா்வலா் நாகூா் சித்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.