நாகப்பட்டினம்

திருவெண்காடு அருகே லாரி மோதி சிறுவன் பலி

DIN

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே லாரி மோதி சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்காடு அருகேயுள்ள திருவாலி மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் மதன் (13). திருவாலி அரசு உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துவந்த மதன், தனது உறவினரான கிருபானந்தனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

திருவாலி ஊராட்சி அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில், மதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த கிருபானந்தனை சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மதனின் சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருவெண்காடு காவல் ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT