நாகப்பட்டினம்: நாகை பாப்பாக்கோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விழா, சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. ஐ.எஸ்.ஓ. நிறுவன முன்னணி தணிக்கையாளா் பி. விவேக், கல்லூரிக்கான சா்வதேச தரநிலை அமைப்புச் சான்றை (ஐ.எஸ்.ஓ.), சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்திடம் வழங்கினாா்.
கல்லூரி முதல்வா் முனைவா் ஜி. ஜிப்ட்சன் சாமுவேல், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவின் ஒருங்கிணைப்பாளா் டி. குமாரவடிவேல், கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளா் எஸ். இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.