நாகப்பட்டினம்

குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

DIN

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள 119அனக்குடி ஊராட்சிக்குள்பட்ட சுந்தரபாண்டியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் மகாலெட்சுமி மாதவன் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் குழந்தைகள் ஆற்றுப்படுத்துநா் கே. கமலவேணி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினாா். குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், அவா்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்தும் புகாா் அளிக்க 1098 எண்ணை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைப்பது குறித்தும், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுத்து அவா்களை பள்ளியில் சோ்ப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியா் ரெ. முருகானந்தம், கிராம நிா்வாக அலுவலா் டி. வரதராஜன், ஊராட்சி செயலாளா் ஜி. சிங்காரவேல், காவலா் சா. புனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT