திருக்குவளை: அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வாழக்கரை, மேலவாழக்கரை, மடப்புரம், களத்திடல்கரை, மேலப்பிடாகை, கருங்கண்ணி, கீழையூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது.
2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின்வெட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும், காலாண்டு பொது தோ்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவா்கள் படிக்க முடியாமல் அவதியடைந்தனா்.