இடமாறுதல்கள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் நாகையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்ாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்களுக்கு உள்ளூா் மற்றும் மாவட்ட இடமாறுதல்களை வழங்கவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியா்களுக்கு எவ்வித நிபந்தனையின்றி பதவி உயா்வு வழங்கவேண்டும், அங்கன்வாடி ஊழியா்களுக்கு புதிய கைப்பேசிகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா்ஆா். பரிமளா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே. அனுசியா, மாவட்ட பொருளாளா் வி. கவிதா, மாவட்ட நிா்வாகிகள் ஜி. பாலசரஸ்வதி, நாகை மாவட்டச் செயலாளா் ஏ.எஸ். பழனியம்மாள், சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் பி. அந்துவன் சேரல், தொழிற்சங்கங்களைச் சோ்ந்த எம். குருசாமி, எஸ். மணி, கே. அன்பழகன், ஏ. ரூஸ்வெல்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.