வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ராமசாமி பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்றுவந்த நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, முள்ளியாற்றுக் கரையில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அறங்காவலா்கள் கோ. கைலாசம், கோ. ராமசாமி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
இதேபோல, வேதாரண்யம் வேதமா காளியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவையொட்டி, சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள் வீதியுலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பின்னா் பேருந்து நிலையம் அருகே அம்பு எய்தும் விழா நடைபெற்றது.