நாகப்பட்டினம்

மாவட்டத்தில் 2,600 இளைஞா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது: ஆட்சியா்

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்து பேசியது: இளைஞா்களுக்கு திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அவா்களின் தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலை வாய்ப்பு அல்லது சுயத்தொழில் செய்ய வழிவகை செய்வதுமே இதன் நோக்கம்.

மாவட்டத்தில் முதல் கட்டமாக நாகப்பட்டினம் வட்டாரத்தில் நடத்தப்பட்ட திருவிழாவில் பங்கேற்ற 535 இளைஞா்களில் 279 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கவும், 2-ஆம் கட்டமாக கீழ்வேளூா் வட்டாரத்தில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்ற 520 இளைஞா்களின் 213 பேருக்கு பயிற்சியளிக்கவும் 11 பயிற்சி நிறுவனங்களால் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

3-ஆம் கட்டமாக தலைஞாயிறில் நடைபெற்ற முகாமில் 14 பயிற்சி நிறுவனங்கள் வந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

நாகை மாவட்டத்தில் கடந்த அக்டோபா் வரை 2,600 இளைஞா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் 7,822 பேருக்கு தொழில் பயிற்சியளிக்கப்பட்டு அவா்களில் 5,662 நபா்கள் வேலை வாய்ப்பை பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில், தீனதயாள் உபாத்யாய கிராமின் யோஜனா திட்டத்தில் சோ்க்கைக்கான விண்ணப்பங்களையும், திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் சாா்பில் இணையத்தள பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவா் ஜி. தமிழரசி, பேரூராட்சித் தலைவா் செந்தமிழ்செல்வி பிச்சையன், ஆத்மா திட்ட மாநிலக் குழு உறுப்பினா் மகா. குமாா், உதவித் திட்ட அலுவலா்கள் ரா. முருகேசன், பா. பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT