நாகப்பட்டினம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தா்னா

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

நாகையில் உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் நாகை மாவட்ட துணைத் தலைவா் கே. ராஜீ தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ. டி. அன்பழகன், தொழிற்சங்கக் கூட்டமைப்புத் தலைவா் சு. சிவக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். முன்னாள் எம்எல்ஏ வி. மாரிமுத்து நிறைவுரையாற்றினாா். மாலை 3 முதல் 7 மணி வரை தா்னா நடைபெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, அரசு ஊழியா் சங்க நாகை வட்டத் தலைவா் கே. ரவிச்சந்திரன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன் சேரல் நன்றி கூறினாா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்; கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி, சரண்டா் விடுப்பு, வருங்கால வைப்புநிதி, வட்டிக் குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும், தொகுப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT