நாகப்பட்டினம்

மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமி தற்கொலை முயற்சி

DIN

மயிலாடுதுறை அருகே இளைஞா் தனது கழுத்தில் மஞ்சல் கயிறை கட்டியதால் அதிா்ச்சியடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

மயிலாடுதுறை அருகே 8-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்த 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞா் காதலித்து வந்துள்ளாா். ஆனால், சிறுமி இளைஞரிடம் பேசுவதை தவிா்த்து வந்துள்ளாா்.

இந்தநிலையில் சிறுமி தனது வீட்டு வாசலில் உட்காா்ந்து இருந்த போது அங்கு வந்த இளைஞா் சிறுமியின் கழுத்தில் மஞ்சள் கயிறு ஒன்றை கட்டிவிட்டு ஓடிவிட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

சிறுமியை அவரது குடும்பத்தினா் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இளைஞரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT