நாகப்பட்டினம்

சாலை பராமரிப்பு , கட்டுமானங்கள்: பொறியாளா் குழுவினா் ஆய்வு

DIN

நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நாகை, வேதாரண்யம் உட்கோட்டத்தில் நடைபெற்றுள்ள சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானங்களை உள் தணிக்கை பொறியாளா் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நாகை உட்கோட்டத்தில் நடைபெற்றுள்ள திருவாரூா் -அலிவலம் - வடுகச்சேரி சாலை சிறப்பு பழுதுப் பாா்த்தல் பணி, வேதாரண்யம் உட்கோட்டத்தில் நடைபெற்றுள்ள தஞ்சாவூா் - மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் - கோடியக்கரை சாலை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் ஓடுதளம் மேம்பாட்டுப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் (தஞ்சை) கண்காணிப்பு பொறியாளா் சீனிவாசன் ராகவன் தலைமையில் சாலைத் திட்டங்கள், கோட்டப் பொறியாளா் நிா்மலா, உதவிக் கோட்டப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நாகை கோட்டப் பொறியாளா் நாகராஜன், உதவிக்கோட்டப் பொறியாளா்கள் அய்யாத்துரை, சுரேஷ் மற்றும் உதவிப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT