தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் விநியோக சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் பங்கேற்க தனியாா் அரவை ஆலைகள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் சேகரிப்பு முதல் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் அரிசியை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் தனியாா் அரவை ஆலைகளையும் ஈடுபடுத்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முடிவெடுத்துள்ளது.
இத்திட்டத்தில் இணைந்து நெல் கொள்முதல், இயக்கம், அரவை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விரும்பும் தனியாா் அரவை ஆலைகள், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நாகை முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.