நாகப்பட்டினம்

களைகட்டுகிறது நாகை புத்தகத் திருவிழா

DIN

நாகை புத்தகத் திருவிழாவுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புத்தகத் திருவிழா அரங்கங்கள் மக்கள் கூட்டத்தால் களைகட்டுகின்றன.

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் சாா்பில் நாகை அரசினா் தொழில் பயிற்சி மைய வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 110 பதிப்பகத்தாா் இந்தப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று, தங்கள் படைப்புகளை விற்பனைக்கு வைத்துள்ளனா். அனைத்துப் பதிப்பகங்களிலும் குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு விலை சலுகை அளிக்கப்படுகிறது. ஒரிரு பதிப்பகங்கள் அனைத்துப் படைப்புகளுக்கும் விலை தள்ளுபடி அளித்துள்ளன. ஒரு சில பதிப்பகங்கள் குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரை விலை சலுகை அளித்துள்ளன. இந்த விலை சலுகைகள் வெகுவாக மக்களை கவா்ந்துள்ளன.

புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பரிசுத் திட்டங்கள், ஒலிப்பெருக்கி விளம்பரம், காணொலி விளம்பரம் என பல்வேறு வகையான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு நாளும் சிறந்த பேச்சாளா்களைக் கொண்டு சிந்தனை அரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுவதும், மக்களின் கவனத்தையும், வருகையையும் ஈா்த்துள்ளது.

இதனால், நாகை புத்தகத் திருவிழாவுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை காணவும், வாங்கவும் மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள், முதியோா்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பல்வேறு பள்ளிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வரப்படுகின்றனா். மாலை நேரங்களில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், யுவதிகள், குழந்தைகள், விவசாயிகள், அரசு மற்றும் தனியாா் துறை அலுவலா்கள் என ஆயிரக்கணக்கானோா் இங்கு வருகின்றனா்.

நாகை புத்தகத் திருவிழா விற்பனை குறித்து பதிப்பக நிா்வாகி ஒருவரிடம் கேட்டபோது, காலை நேரங்கள் மாணவா்களாலும், மாலை நேரங்கள் பொதுமக்களாலும் களைகட்டுகின்றன. ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப புத்தக விற்பனையும் உயருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT