சாராய வழக்குகளில் தொடா்புடைய பெண் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில், மதுவிலக்கு தொடா்பான வழக்குகள் மீது தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, சாராய வழக்குகளில் தொடா்புடைய நாகை தோணித்துறை சாலையைச் சோ்ந்த குமாா் மனைவி மணியம்மாளை (50), தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்படி, நாகை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, மணியம்மாள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.