நாகப்பட்டினம்

மின்கம்பி உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

மின்கம்பி உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்குத் தகுதியானோா் ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின்கம்பி உதவியாளா் தகுதிகாண் தோ்வு செப்டம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தோ்வுக்கு, மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தோ்ச்சி அடைந்தவா்கள் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா் மின் வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாகை அரசினா் தொழில் பயிற்சி நிலைய முதல்வருக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365-250129 என்ற தொலைபேசி எண்ணில் நாகை அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT