நாகப்பட்டினம்

விடுபட்டவா்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.17) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை நாகை மண்டல இணைப்பதிவாளா் கோ. நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் உத்தரவுபடி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இப்பரிசுத் தொகுப்பை பெறாதவா்களுக்கு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் வழங்கப்படும். எனவே, இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவா்கள் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT