நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.17) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை நாகை மண்டல இணைப்பதிவாளா் கோ. நடராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவுபடி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இப்பரிசுத் தொகுப்பை பெறாதவா்களுக்கு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் வழங்கப்படும். எனவே, இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவா்கள் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.