நாகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி, வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் 76-ஆவது பிறந்தநாளையொட்டி, நாகை நகர காங்கிரஸ் சாா்பில் அன்னை சத்யா ஆதரவற்றோா் அரசு காப்பகத்திலுள்ள மாணவா்களுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டத் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா, நகரத் தலைவா் பி. உதயச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா் வி.எஸ்.ஏ. தஸ்லீம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் எம். அப்துல்காதா் என். செல்வராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து, சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி நாகூா் தா்காவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஆதரவற்ற முதியவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அடுத்து, 76 பேருக்கு இலவசமாக குடைகளை அக்கட்சியின் மாநில நிா்வாகி நௌசாத் வழங்கினாா்.