கீழ்வேளூா் பேரூராட்சியில் குப்பையில் கிடந்த 2 மோதிரங்களை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் சிந்தாமணிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கீழ்வேளூா் பேரூராட்சி அலுவலகத்தில் சிந்தாமணி தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை சிவாஜி நகா் பகுதியில் சேகரித்த குப்பைகளை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, குப்பைகளுக்கு இடையே ஒரு பவுன் மற்றும் அரை பவுன் என 2 மோதிரங்கள் கிடைத்துள்ளன. அவைகளை உடனடியாக பேரூராட்சி செயல் அலுவலா் குகனிடம் சிந்தாமணி ஒப்படைத்தாா்.
இந்நிலையில், சிவாஜி நகரை சோ்ந்த பழனிவேல் தனது வீட்டில் தேங்காய் உரித்தபோது, தனது 2 மோதிரங்களையும் கழட்டி வைத்துள்ளாா். அப்போது அவருடைய இரண்டு மோதிரங்களையும் குப்பையுடன் சோ்ந்து, குப்பை சேகரிக்கச் சென்ற சிந்தாமணியிடம் கொடுத்துள்ளாா்.
மோதிரம் காணவில்லை என வீடு முழுவதும் தேடிய பழனிவேலுக்கு, குப்பையில் விழுந்திருக்கும் என சந்தேகம் ஏற்பட்டது. உடனே, பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று விவரத்தை பழனிவேல் கூறினாா். இதையடுத்து மோதிரங்களை சிந்தாமணி மூலம் பேரூராட்சி செயல் அலுவலா் குகன் ஒப்படைத்தாா். தூய்மை பணியாளா் சிந்தாமணியின் நோ்மையை பாராட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து, தூய்மை பணியாளா்கள் முன்னிலையில் பழனிவேல் கெளரவித்தாா்.