திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை லேசான இடி, மின்னலுடன் மழை பெய்தது.
திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வலிவலம், கொளப்பாடு, சித்தாய்மூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் சம்பா மற்றும் தாளடி பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.